சவுதியில் முதன்முறையாக பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சவுதியில் முதன்முறையாக பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்
சவுதியில் முதன்முறையாக பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்ற பின் பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

"முன்னதாக 2015- ல்  அங்கு பெண்களுக்கு  ஓட்டுரிமை வழங்கப்பட்டது. மேலும் வாகனம் ஓட்டவும் , குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் உயர்கல்வி பயிலவும் தனியாக தொழில் தொடங்கவும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன."

இந்நிலையில், பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. அதில்  பர்தா அணிந்தபடி, முகம், உடல் முழுவதும் மறைத்தபடி 3 கி.மீ. தொலைவுக்கு 1500க்கும் மேற்பட்ட பெண்கள் ஓடினர்.

இந்த மாரத்தானில் மிஸ்னா அல் நாசர் என்பவர் வெற்றி பெற்றார். இவருக்கு பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
TAG
Author Avatar

Author: Kiruththigan verified_user

CEO, @YarlInternet, the digital repository of The Yarl Media Group. Journalist | Member of the Editorial Board at @YarlThinakkural | @YarlVoice | @YarlExpressNews | Instagram : kirusayz | Twitter : kirusayz facebooktwitterwhatsapplinkedininstagram